திங்கள், ஜூன் 22, 2009

மெட்ரோ கவிதைகள் - 14

*
மடித்துக் கட்டிய வேட்டியும்..
தோல்வார் செருப்பும்..
இறுக்கிப் பிடித்திருக்கும்
கருங் குடையும்..
சுருட்டிவிட்ட சட்டை முன்டாவும்..
நரை முறுக்கு மீசையும்..
புகையும் பீடியும்..

சாம்பல் நிழல் படிந்த..
கண்களும்..

பட்ஜெட்டை யோசித்தபடியே..
வேடிக்கைப் பார்க்கின்றன..

கட்டிக் கொண்டிருக்கும்..
வீட்டுக்கான..

சிமென்ட் கலவையை..!

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக