*
எந்த நொடியிலும்..
உடைந்து விடக் கூடியதாக..
உப்பத் தொடங்கியது..
நம்
இருவருக்கும் இடையே
ஒரு மௌனம்..
அதை..
அளந்து பார்க்கும்
துணிச்சலோடு..
வலை பின்ன
முனைந்தது
மெல்ல ஒரு சிலந்தி..
அறுத்துவிட
யத்தனித்த..
மென் காற்றொன்று..
திசை தொலைந்த குழந்தையென..
நம்
இருவரின்..
முதுகை சுற்றி சுற்றி..
காதில்..
துப்பியது..
மேலும் ஒரு மௌனத்தை..
ரீங்கரிக்க மறந்ததாக..
விர்ரீட்டு கடந்த
வண்டும் கூட..
கடற் காற்றின்..
அருவக் குமிழை..
திருகித் தொலைந்தது..
பரிணாமம்
எழுதத் தொடங்கிய..
நம் மௌனத்தை..
பால் வீதியின்..
இருளுக்குள்ளிருந்து..
மௌனமாய்
வாசித்துக் கொண்டிருக்கிறது..
பிரபஞ்ச கண்களிரண்டு..!
******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக