திங்கள், ஜூன் 22, 2009

முதல் கவிதை..

*

கணக்கு வகுப்பின்
கடைசி பெஞ்சில்..

தமிழில்
ஏதோ
கிறுக்கிக் கொண்டிருந்ததை..
கண்டு பிடித்த..

ராமலிங்க வாத்தியார்..

கை நீட்டச் சொல்லி
அடித்த..
பிரம்பின் முனையிலிருந்து..
புறப்பட்டது..

என்
முதல் கவிதை..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக