*
மனசின்
ஒற்றையடிப் பாதையில்
கேட்டுக் கொண்டேயிருக்கும்..
வலியின்
குளம்போசைகள்..
ஒவ்வொரு
இரவும்..
நெரிபடும் பற்களின்
தாடையசைவுகளை..
கனவின்
கரும்பலகையில்
கிறுக்கி வைக்கின்றன..
தழும்புகள்..
கூர்
மழுங்கிய
சொற் வாளின்..
உலோக மோதலை..
நெஞ்சில் விழாமல்
தாங்கிப் பிடிக்கிறது..
மௌன
கேடயமொன்று..!
******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக