வியாழன், ஜூன் 11, 2009

வலியின் குளம்போசைகள்..

*
மனசின்
ஒற்றையடிப் பாதையில்
கேட்டுக் கொண்டேயிருக்கும்..

வலியின்
குளம்போசைகள்..
ஒவ்வொரு
இரவும்..

நெரிபடும் பற்களின்
தாடையசைவுகளை..

கனவின்
கரும்பலகையில்
கிறுக்கி வைக்கின்றன..

தழும்புகள்..

கூர்
மழுங்கிய
சொற் வாளின்..
உலோக மோதலை..

நெஞ்சில் விழாமல்
தாங்கிப் பிடிக்கிறது..

மௌன
கேடயமொன்று..!

******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக