திங்கள், ஜூன் 22, 2009

எதிர் திசை...

*

வாசிப்பு வரிகளின்
பயணத்தின் பொருட்டு
மந்தமாய்..
உருள்கின்றன பாதைகள்..

தூக்கம்..
என் கண்களிலிருந்து
குதித்து..
எதிர் திசையில் ஓடுகிறது..

புத்தகத்தை..
நெருடும்..
என்
விரல்களைப்
பற்றிக் கொண்டு..

கதாப்பாத்திரங்கள்..
என்னிடம்..
வழி கேட்கின்றன..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக