வியாழன், ஜூன் 11, 2009

உடைபட்ட மண் சில்லுகள்..

*
மரணங்களை..
வாசித்தபடி..
எரிகின்றன அடுக்கிய விறகுகள்..

உடைபட்ட
மண் சில்லுகளில்
தேங்கியிருக்கும்..
தண்ணீரில்..

கரைந்து விட்டதோர்
உறவின் கசடு..

சாம்பலின் மிச்சங்களை..
அள்ளி புறப்படுகிறது..
எதிர் பாராமல்
வீசுகின்ற காற்றொன்று..

காரணமேதுமின்றி..
நட்டு வைத்திருக்கும்
ஒற்றை கொம்பின்..
மீது..

பரிதாபமாய்..
உட்கார்ந்து..
காத்திருக்கின்றன..
காகங்கள்..

முன்னோர்.. படையலென..
இலையில்..
இடப்படுகிறது..

சொச்சமாய்.. உணவு..!

*****


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக