திங்கள், ஜூன் 22, 2009

கையகலக் குழிகள்..

*

அம்மாவின்
அதட்டலுக்கு..

அலுத்தபடி..சிணுங்கி..
அவசரமாய்..

முருங்கை மரத்துக்கடியில்..
கையகலக் குழிப் பறித்து..

'பால் பல்லை ' - புதைத்த
சிறுமியின்.. கனவில்..

மரமெங்கும்.. பூத்தது
தங்க காசு..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக