திங்கள், ஜூன் 22, 2009

இலக்கியப் பட்டறையின் கனப்பு..

*

என்னைக்
கொன்று விடப் போவதாக
கவிதையெழுதியிருந்தான்..
நண்பன்..

அவனுக்காக
காத்திருந்த
கால் நூற்றாண்டு
இடைவெளியில்..

' நான் ' - பலகூறுகளாய்
பிரிந்து..பெருகி..
பலராகி விட்டேன்..

ஒரு
கூட்டத்தையே..
கொல்வதற்கான
ஆயுதம்..

அவன்..
இலக்கியப் பட்டறையின்..
நெருப்பில்..

கனன்று கொண்டிருக்கலாம்..
இன்றும்..!

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக