*
என்னைக்
கொன்று விடப் போவதாக
கவிதையெழுதியிருந்தான்..
நண்பன்..
அவனுக்காக
காத்திருந்த
கால் நூற்றாண்டு
இடைவெளியில்..
' நான் ' - பலகூறுகளாய்
பிரிந்து..பெருகி..
பலராகி விட்டேன்..
ஒரு
கூட்டத்தையே..
கொல்வதற்கான
ஆயுதம்..
அவன்..
இலக்கியப் பட்டறையின்..
நெருப்பில்..
கனன்று கொண்டிருக்கலாம்..
இன்றும்..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக