ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

மெட்ரோ கவிதைகள் - 41

*
சிறுவர்களைப் பறித்துக் கொண்டது..
விளையாட்டாய் நகரம்..

டிஜிட்டல் போர்களில்
ரத்தம் தெறிக்க..

வெட்டிச் சாய்த்தபடியோ
சுட்டு வீழ்த்தியபடியோ
களிக்கிறார்கள்..

எப்போதும்
ஒரு நண்பன் இறந்துபோகிறான்
தற்காலிக எதிரியாய்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக