ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

மௌனம் பிசகிய கனவென்றே.. கருநிழல் சுமந்த பெருங்கேவல்..

*

நெடுந்துயரக் கேவல் ஒன்று
மொக்குடைந்து பரவிய
மகரந்த இரவில்..

சாளரம் துழாவி உள்விரைந்த
காற்றின் விசையில்..
எழுதிய தாள்கள் புரண்டு
சொற்கள் சிதறின..

கரும்பாசிப் படர்ந்த சுவற்றின் மீது
கால்கள் பாவ..
சில்லிட்டத் தரையில்..

மௌனம் பிசகிய
கனவென்றே..

அறையைக் கடந்து
வானம் பார்த்த உப்பரிகையில்
கொடிகள் பற்றி மேலேறின..

கருநிழல் சுமந்த
அப்பெருங் கேவல்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக