ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

' இப்படித்தான்..ஒரு முறை..'

*

' இப்படித் தான் ஒரு முறை ' - என்று
ஆரம்பமாகும் கதைகளிலெல்லாம்..

யாரோ காயப்படுகிறார்கள்..
ஒரு அந்தரங்கம் பறிபோகிறது..
கொடுக்கப்பட்ட ஒரு வாக்குறுதி மீறப்படுகிறது..
தெரியவா போகிறது - என்னும் பொறுப்பின்மை
விநியோகம் ஆகிறது..

' இப்படித் தான் ஒரு முறை ' - என்று
ஆரம்பமாகும் கதைகள்..

சொல்லப்படும் இடத்திலிருந்து
பெற்றுக் கொள்கிறது..
சாயல்களை உடைய மேலும் சில கதைகளை..

ஜோடிப்பு அலங்காரத்தோடு மேலும் சில
நிஜமற்ற வர்ணங்களை பூசுகிறது..

வெடிச் சிரிப்பும்..நக்கலும் நையாண்டியும்
கலந்து கலந்தே.. ரகசியங்களைக் கொடுத்து
ரகசியங்களை பெற்றுக் கொள்கிறது..

' இப்படித் தான் ஒரு முறை..' - என்று
ஆரம்பமாகும் கதைகளுக்குள்..

ஒளிந்து கொள்கிறது
கேட்பவர்களுக்கே தெரியாமல்..
கேட்பவர்களின் கதைகளும்..

இப்படித் தான் ஆரம்பமாகும்
ஒவ்வொரு கதையும்..

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக