திங்கள், பிப்ரவரி 01, 2010

மைக் கண்களின்..நீள் பீலி..

*

மந்திரம் வரைந்த
மைக் கண்களின் நீள் பீலி..
என் கனவில்
தீற்றிச் சென்றது..
நீல நிறத்தை..

பார்வையின்
வண்ணக் குடுவையில்..
விரல் தீண்டி..
எழுதிய..ஓவியத்தின்..
நிழல் எங்கும்..

நீ
மட்டுமே
பரவி இருக்கிறாய்..

ஒரு கவிதையை..
அடிக்குறிப்பாய் எழுதி வைக்கிறேன்..
எப்போது வந்து வாசித்துச் செல்வாய்..?

*****

2 கருத்துகள்: