ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

அபத்தமானத் தலைப்பொன்றும்..தூக்கிலிடும்படியான உத்தரவும்..

*

' எழுது ' என்பதாக குறுக்கப்படும்
எல்லைகளில்..
சொற்கள்.. வேலிக்கம்புகளைப் போல
செருகப் படுகின்றன..

மூச்சு விடுதலுக்குரிய
அடிக்கோடுகளில்
எப்போதும் கொப்புளிக்கிறது
அபத்தமானத் தலைப்பொன்று..

மரணத் தத்துவத்தை..
தூக்கிலிடும்படியான உத்தரவிலிருந்து
காகிதம் தாண்டி..
ஓடும் பேனா முனை..

உடைப்படுதலின்
கோட்பாட்டை..
சுவாசித்து சுலபமாய் தப்புகிறது..

முன் தீர்மானத் திணறலை
முற்றிலும் நிராகரித்து..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்ம்மை .காம் ) பிப்பிரவரி - 2010

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2461

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக