ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

நிறங்களை இழக்கத் தூண்டும் சொற்கள்..!

*

கனன்று சிவந்த கண்கள்
காட்சிகளைப் புறக்கணிக்கின்றன..

சமாதானம் பேச யத்தனித்த
நாவுகளில்..
பொய்களின் நிறம் மஞ்சளென
பூசப்படுகிறது

முற்றிலும் நிராகரிப்பது
சாத்தியமில்லை என்பதை
யதார்த்த குடுவையில்
கரைக்கிறது நீல வண்ணத்துகள்..

பசலைப் படர்வு
உணர்வுகளின் அடிவயிற்றில்
புதைப்படுவதை..

நரம்புகள் அரை மனதோடு
ஒத்துக் கொள்கின்றன
பச்சையென..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக