ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

மீதி சரித்திரம்..!

*

குத்து வாளின்..
கைப்பிடி அலங்காரத்தில்..
உறைந்த புள்ளிகளென
ரத்தத் துளிகளை
சேமித்து வைத்திருக்கிறது..
சரித்திரம்..

புருவம் உயர்த்தும்
ஆச்சரியங்களோடு..
அகழ்ந்தபடி..
பத்திரப்படுத்துகிறோம்..

வந்து போவோர்
பார்வைக்கு ஏதுவாய்..

கண்ணாடிப் பேழைக்குள்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக