ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

மெட்ரோ கவிதைகள் - 42

*
' கருப்பு நிற டர்பன் கட்டிய தலை..' - என்று
அடையாளம் சொன்ன பிறகு..
செல்போன் அணைந்துவிட்டது.

அடிக்கும் வெய்யிலில்..
ஈரப் பிசுபிசுப்போடு
வெகு நேரம் காத்திருக்க நேர்கிறது..
அவள் வருகைக்காக..

டர்பனையும்
கழட்டிவிட முடிவதில்லை..
முறைக்கும் காகங்களும்..
மரக்கிளையிலிருந்து
விலகிப் பறப்பதாயில்லை..!

****

1 கருத்து: