ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

தொடுவானத்தின் நேர்க்கோட்டு நிழல்..

*
பதுங்கிக் கொண்டது
என் தீர்மானங்களற்ற பாதையின்
மைல் கற்கள்..

தொடுவானத்தின்
நேர்க்கோட்டில் முளைக்கிறது
ஒரு பிரம்மாண்ட கருமை நிழல்..

வழித்துணைக்கு
மனசுக்குள் பறந்தபடி
மிதக்கின்றன மின்மினிப் பூச்சிகள்..

பாதங்களைப் பழக்கிக்கொண்ட
பாதைகள்
வருடியபடி மண் பறத்துகின்றது..

மீண்டுமொரு பயணத்தில்
திரும்பி வருதலின்
சாத்தியக் கூறுகளை
கணக்கில் கொண்டு

முடிவுகளின் முனைகளை
விரல் நுனிகள்
காற்றில் திருகியபடி..

இரவுக்குள் மூழ்கிவிடுகிறது
எங்கெங்கோ பயணப்படும்
கால்களோடு..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் - ( பிப்பிரவரி - 25 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4235:2010-02-25-08-31-21&catid=2:poems&Itemid=88

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக