ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

நிழல் போல்..கிழித்துக் கடக்கும் பாய்மரங்கள்..

*

முகம் திருப்பிக் கொண்டாய்..

துண்டிக்கப்பட்ட உரையாடலை
கடலலை..
சுவைத்தபடி உள்ளிழுத்துக் கொள்கிறது..

பொன்னிற வட்டங்கள்
ஜொலிக்கும் நீரின் நெடும்பரப்பை..
நிழல் போல்..
கிழித்துக் கடக்கும் பாய்மரங்கள்

'வீடு திரும்புதலை'
நினைவுப் படுத்திய
பின்..

திரும்பிப் பார்த்து சொல்லுகிறாய்..
'சொல்லு..' - என்று..

எதைச் சொல்ல..?

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக