ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

முன்னெப்போதோ தொலைத்துவிட்ட பருவம்..

*

முகங்களைக் கிழிக்கின்றன
தசைப் புதிர்கள்..
காலம் எழுதிய நுண்ணிய வரிகளில்
சுருங்கி மடிகின்றன
சொல்லவே படாத கணங்கள்..

தளர்வுற்ற நடையை
மொழிப்பெயர்த்து
தெருவெங்கும் எழுதி நகர்கின்றன
அடிப் பாதங்கள்..

மரியாதை நிமித்தம்
கை கூப்பும் எதிர் மனிதர்களை
அடையாளம் காண..
புருவங்களின் மேல் தாற்காலிகக் கூரையொன்று
வேயும் உள்ளங்கை நிழலுக்குள்
அசையக் கூடும்
முன்னெப்போதோ தொலைத்துவிட்ட பருவம்..

கடந்து போகும்
வெயிலோ தென்றலோ..
கூர் மழுங்கி ஊடுருவுவது
தசைப் புதிர்களின் அறியப்படாத
வரிவடிவங்களையும்..
அவை புள்ளியிட மறந்த.. வெற்றிடங்களையும்..

****

நன்றி : ' உன்னதம் ' மாத இதழ் - ( பிப்பிரவரி - 2010 )

1 கருத்து:

  1. Life has its own passages..
    Live it with your passion
    Navigating pathways
    Non stoppable moments
    Never comes again....
    So does the years...

    sir this is what i felt reading this .....

    பதிலளிநீக்கு