ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

மெட்ரோ கவிதைகள் - 43

*
கான்க்ரீட் இழைந்த
மொட்டை மாடியில்

அகன்ற பிளாஸ்டிக் குவளையுள்
ஊற்றி வைத்த
குழாய் தண்ணீரில்
வெயில் தளும்பிக்கொண்டிருந்தது..

நா வறண்டு
விருட்டென்று.. வந்ததன் விளிம்பில்
கால்பற்றி உட்கார்ந்த காகம்..

அவசரமாய்
பருகிப் பறந்தது..
தளும்பிய வெயிலை..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக