ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

பார்வைத் தூண்டிலிட்டு காத்துக்கிடக்கிறாய்..

*

நீ தேடும் நீ என்பவன் நீயல்ல..
நீ
இங்கு தூங்கி..
வேறெங்கோ தான் எழுகிறாய்

எத்தனை முறை சொன்னாலும்
அடம் பிடிக்கிறாய்
நம்பிக்கை அற்று
பிடி நழுவுகிறாய்

என் கண்களுக்குள் விழுந்து
தொலைந்த கனவொன்றை
பார்வைத் தூண்டிலிட்டு..
சிக்குமென்று காத்துக் கிடக்கிறாய்..
யுகம் யுகமாய்..!

நீ தேடும் நீ என்பது நீயல்ல..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக