ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

பிரதிகள் பதிவு செய்யும் மனிதன்..

*

பிரதிகளில் நிகழ்கின்றது
தருணங்களின்
அலைபாய்தல்..

முடிச்சிட்டுக் கொள்கின்றன
பிணைப் பின்னலென கணங்கள்..

இன்னல்களின் ஆழ வேர்களில்..
விடுபடுவதில்லை..
நிஜங்களின் சாயல்களோ
சொல்லப்பட்டதாகத் தூண்டும்
யதார்த்தங்களோ..

பிரதிகள் பதிவு செய்கின்றன..
மனிதனின்..
குறைந்தபட்ச வாழ்வை..
சற்றேறக் குறைய மிகைப்படுத்தி..

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக