ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

பிடிமானம் இழந்து வெளியேறும்..பார்வையின் நிழல்..

*

மதுக்குடுவையின்
கழுத்து வளைவுக்குள்
தளும்புகிறது அவன் புலம்பல்

நுரைத்தபடி வழிவதன்
நெடியில்..
துக்கத்தின் பிசுபிசுப்பால்
குமட்டுகிறது
அவன் உளறல்

நடுங்கும் விரல்களுக்குள்
வழுக்குதளோடு உருள்கிறது
கண்ணாடி டம்ளர்

பிடிமானம் இழந்து தவிக்கும்
பார்வையின் நிழல்கள்
பின்னிரவு நாற்றங்களோடு

அமைதியாக வெளியேறுகிறது
இதயத்தின் கூட்டிலிருந்து..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக