ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

நந்தவனத்து நதியும்..அவளின்.. இடது பக்க நாற்காலியும்..

*

நூலகத்துக்குள்
நுழையும்போதெல்லாம்
இடது பக்க நாற்காலியில்
அவள் உட்கார்ந்திருக்கிறாள்.

விரைந்து
புத்தக வரிகளை விரட்டும்
கண்களும்..

சின்னதாய்
முணுமுணுத்தபடி அசையும்
உதடுகளும்..

பென்சிலை உருட்டும் விரல்களும்..

அவளைச் சுற்றி..
ஒரு நந்தவனத்தையும்
குறிஞ்சிப் பூக்களையும்
தேன் உறிஞ்சும் வனத்துப்பூச்சிகளையும்
காலருகே
சலசலத்தோடும் நதியின் குளிரையும்
அசையும் நாணலின் முத்த நுனிகளையும்..

வாசிக்கும் பக்கங்களில்...
சாரல் தெளித்துக் கொண்டிருக்கக் கூடும்..!

****

1 கருத்து: