ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

சட்டென பறிபோன பார்வை..

*

சொல்லியபடியே இருந்தார்கள்
கல்விக் கண் ஒன்றே
அறிவுலகின் வாசல் என..

அறியாமை இருளிலிருந்து
கிழித்துப் புறப்பட்ட
உயரழுத்த வோல்ட்டேஜ்
மின்னலொன்று..

சட்டென பறித்துவிட்டது
பார்வையை..

தடியூன்றி நடக்கும்படி
உத்தரவொன்று..
பிரகடன செய்யப்பட்டதோடல்லாமல்..

இதரச் சலுகைகளும் பெறலாம்..
என்பதாக
வந்து சேர்ந்த அறிவிப்பில்..

தத்தி தத்தி நடக்க நேர்ந்தது..
சமூகச் சாலையில்..

நல்ல டிராபிக்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக