ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

ரசாயனக் கூடத்தில் மிதக்கும் புன்னகை..

*

ஒவ்வொரு முறையும்
மயக்கங் கொள்ள செய்கிறாய்..

புன்னகையில்
ரசாயனக் கூடம் வைத்திருக்கிறாய்..

விழியோரக் கணங்களில்
மின்னல் குறுக்கிடுகிறது

மழை பொழிவதற்கு முன்பே
குடை விரித்துவிடுகிறாய்

பூக்களின் இதழ்களில்
இதழ் பதித்து மீள்கிறாய்
தேன் துளிகள் ஆவியாகின்றன

மௌனத்தை காம்போடு
கூந்தலில் செருகிக் கொள்கிறாய்..

உன் கொலுசு ஒலியால்
தினம் அந்தத் தெருவின்
இயக்கங்கள் ஸ்தம்பிக்கின்றன..

ஒன்று
நினைவில் கொள்
என்னைக் கடக்கும்போது மட்டும்
என்னையும் சேர்த்தே கடத்தி போகிறாய்..!

****

1 கருத்து:

  1. ஒன்று
    நினைவில் கொள்
    என்னைக் கடக்கும்போது மட்டும்
    என்னையும் சேர்த்தே கடத்தி போகிறாய்..!//

    வரி வரியாய் வார்த்தைகளை

    குடிக்க வைகிறீர்கள்

    சுவைக்க வைக்கும் வரிகள் ...........

    பதிலளிநீக்கு