ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

என் கனவின் கதவு முழுவதும்.. உன் உள்ளங்கை ரேகைகள்..!

*

என் கனவாகி விடுதலில்..
நீ பரவசமடைகிறாய்

ஒவ்வொரு சந்திப்பிலும்
ஒரு கனவை
உனக்கு பரிசளித்துவிட நிர்ப்பந்திக்கிறாய்..

கனவு வராத நாட்களில்..
என்
இரவையே கனவாய் புனைய நேர்கிறது..

நாளை சொல்லவேண்டிய கனவுக்காக..
தூக்கம் இழந்து..
விசித்திர அவஸ்தையில் தவிக்கிறேன்..

எப்போதும்..
விடியும்போது ஒரு கனவு
என்னிடம் தயாராக இருப்பதற்கான
உத்தரவாதத்துடன் ..
நீ
'குட் -நைட்' மெசேஜ் அனுப்பிவிட்டு
உறங்கிவிடுகிறாய்..

இரண்டு நாள் விடுமுறையில்
நீ
ஊருக்கு போன நிம்மதியில்..

நான் தூங்கிய
ஒரு இரவில்..

இத்தனை நாளும் அடைபட்டுக் கிடந்த
என் கனவின் கதவு முழுவதும்..
நீ
தட்டித் தட்டிப் பதிந்த
உன் உள்ளங்கை ரேகைகள்..
இந்தப் படுக்கை முழுவதும் படரத் தொடங்குகிறது..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக