திங்கள், பிப்ரவரி 01, 2010

நான் பரிசளித்த..கூர்மைத் தருணங்கள்..

*

சொல்லிவிடத் துடித்ததை..
புதைத்துவிடும்படி..
உந்துகிறது
உன் மௌனம்..

பள்ளம் அளக்கிறாய்
உனக்கு
நான் பரிசளித்த..
கூர்மைத் தருணங்கள் கொண்டு..

அவை..
மழுங்கி இருக்கக் கூடும்..
கொஞ்சம் இப்படி கொடு..

மீண்டுமொரு முறை..
கூர் தீட்டித் தருகிறேன்..!

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக