ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

மேல்தளத்தின் மூன்றாம் அறை - ஒரு சமோசா - மற்றும் ஒரு கவிதை..

*

' உன்னை
நீக்கி விடும்படி கெஞ்சுகிறாய்..

பட்டியலிடும் பொறுப்பை
நேற்றே கை மாற்றிவிட்டேன்..

மேல் தளத்தில்..
மூன்றாம் அறையில்
தொகுத்துக் கொண்டிருக்கும்
பொறுப்பாசிரியனைப் போய் பார்..!

நானிப்போது
சொகுசாக.. சமோசா சாப்பிடவேண்டும்.. '

சொல்லவொனாத் துயரம் தாங்கி..
என்
மேஜையினின்றும்..கீழிறங்கி
மௌனமாய் வெளியேறுகிறது..

அந்தக் கவிதை..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக