ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

மேகங்களென தவழ்ந்து விலகும் நிழல்கள்..

*

வயோதிகத்தின்
முன்மாலை வர்ணங்களை
இரவுகள் வழங்குகின்றன

நடைப்பயணம் போலக் கடந்து
வந்த வாழ்வின் பாதையில்..
மீதமாகி விடுகிறது
கொஞ்சம் மேகங்களென
தவழ்ந்து விலகும் மரணத்தின் நிழல்கள்..

அவைகளைக் கையகப்படுத்தும்
தீர்மானங்களை
பகிர்ந்து கொள்ளும்
ஒரு பார்வை
ஒவ்வொருத்தருக்கும் வாய்த்திருக்கக் கூடும்..

நரை முடியின் சாம்பல் நிறங்களில்..
காலம் குழைத்த அந்தியின் கரைசல்
புறவாசலில்..
வேலிக்காத்தான் செடியின்
வேர்களில் புரையோடியிருக்கலாம்..

சலசலப்போடு
நெளிந்தோடும் நதியின்
நீர்க் குமிழ்களில் உடைந்துமிருக்கலாம்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக