ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

மையத்தில்..அமிழும் கனப்பொருள்..

*

நம் தீர்மானங்களை
மறுதலிப்பதற்கான
சந்தர்ப்பமொன்று வாய்த்தபோது
ஒரு புன்னகையை
நாம் வரைய நேர்ந்தது.

நடைப்பழகும்
நினைவுகளின் சுண்டு விரல்
பற்றுதலுக்குரிய வளைவுகளுடன்
வளரவில்லை.

ஒரு
கணம் தயங்கி..
பின் உருளும் கண்ணீர்த் துளியை..
இதயம் சுண்டியதாக
எப்படிச் சொல்லுவது?

நீரின் அலை வளையங்கள்..
கரைகளை
விரும்பி அடைகின்றன..
என்பதாக..
நினைத்தபடியே மூழ்கிவிடுகிறது..
மையத்தில்..அமிழும் கனப்பொருள்..!

கண்ணீர்த்துளி..
மையத்தில் அமிழும் கனப்பொருள்..
சுண்டுவிரல்..

இவைகளைத் தொட்டுத் தான்..
ஒரு புன்னகையை
நம்மால் வரைய நேர்கிறது..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை .காம் ) பிப்பிரவரி - 2010

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2556

2 கருத்துகள்: