செவ்வாய், மார்ச் 30, 2010

செந்நிற ஆப்பிள்..!

*

மரணத்தின் விலா எலும்பில்
உறங்கி விடுகிறாள் ஏவாள்..

ஆதாமின் தலை சிரைத்து
உறவுப் பானையில்
மூன்று பொத்தலிட்டு..

தலைமுழுகி..

வாயிலடச் சொல்லுகிறார்கள்
கொஞ்சம் அரிசியை..

வெந்து வெடிக்கிறது
பாம்பு பரிந்துரைத்த..
செந்நிற ஆப்பிள்..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை .காம் ) மார்ச் - 2010

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2582

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக