*
மரணத்தின் விலா எலும்பில்
உறங்கி விடுகிறாள் ஏவாள்..
ஆதாமின் தலை சிரைத்து
உறவுப் பானையில்
மூன்று பொத்தலிட்டு..
தலைமுழுகி..
வாயிலடச் சொல்லுகிறார்கள்
கொஞ்சம் அரிசியை..
வெந்து வெடிக்கிறது
பாம்பு பரிந்துரைத்த..
செந்நிற ஆப்பிள்..!
****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை .காம் ) மார்ச் - 2010
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2582
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக