புதன், மார்ச் 31, 2010

மெட்ரோ கவிதைகள் - 48

*
பார்வையற்று
பெற்ற நாணயங்களைத்
தடவி எண்ணும் விரல்களில்..

ரேகைகள்...நெளிந்து..
புதையும் நகரத்து அழுக்கில்..

வாழ்வின் அவலத்துக்கு..
துணையாக மட்டுமன்றி..
மௌன சாட்சியாகவும்..

மறு கையில்..தொங்குகிறது
எப்போதும் ஒரு
கைத்தடி..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக