*
கண்ணிலிருந்து
ஒரு
சொட்டு கண்ணீரைக் கூட
பிதுக்கிவிடலாம்..
கோடை வெடித்த
நிலத்தில்..
தண்ணீர் இல்லை..
கால்நடைகள் புலம் பெயர்ந்தது..
முலை வற்றிய மார்க்காம்பில்..
தாகம் தீர வக்கற்றுப்
போன வாழ்வு..
அவல விவசாயியின்
மழைக் கனவொன்று
தீப்பிடித்துக் கருகும் வாசனை..
பொல்லாத
இரவின் அகண்ட வெளியில்..
திக்கற்று அலைகிறது..
காற்றின் குரல்வளையை
நொறுக்கியபடி..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக