புதன், மார்ச் 31, 2010

மெட்ரோ கவிதைகள் - 45

*
கைவிடப்பட்ட மூதாட்டி..
கோல் ஊன்றி..
முதுகு வளைந்து
யாசிக்கிறாள்..

போவோர் வருவோரின் கருணையை..

நகரம்..
பாக்கெட்டிலோ
கைப்பேசியின் வாயிலோ..
தம்
கைகளை நுழைத்துக் கொள்ளும்
லாவகத்தோடு..
கடந்து போகிறது..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக