புதன், மார்ச் 31, 2010

மெட்ரோ கவிதைகள் - 50

*
உழைப்பாளர் சிலைக்கு
பின்புற படிக்கட்டோரம்
நா வரளும் வெய்யிலில்

முக்காடிட்டு
உட்கார்ந்தபடி

மாங்கா பத்தைகளும்
வெள்ளரிப் பிஞ்சுகளும்
தண்ணீர் பாக்கட்டும்
விற்கிறாள் சிறுமி

அதட்டலோடு கடக்கும்
போலீஸ் மனிதன்
ஓசியில் தாகம் தீர்ந்து

பிளாஸ்டிக் கவரை
வீசிவிட்டு

' நாளைக்கு ஒன்ன இங்க பார்த்தேன்
தொலைச்சிடுவேன்..' -

என்றபடி
நகர்கிறான்
பத்தடி தள்ளி சர்பத் விற்கும்
மனிதனை நோக்கி..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக