*
உயிர்த் திரி நுனி கருகும்
நின வாடை
நாசித் துளைப் புகுந்து
மனம் திருகும்..
மரணச் சுவர் எங்கும்..
படர்ந்தொழுகும்
நினைவழுக்குத் துளி திரவம்..
வெளிப் பிரகாச ஒளிப் புள்ளி
இருள் கதவில்
பொத்தலாகி..
கவர்ந்து போம்
உடல் உதறி..
'வைத்துக் கொள்...பிணம் ' - என்றே..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக