புதன், மார்ச் 31, 2010

புதையும் பகல்கள்..

*

மஞ்சள் உதிர்த்த வெயிலொன்றில்
அதிசய வடிவங்கள் நீட்டும்
நிழலை வரைகிறாள்
சுவரில்
ஒரு சிறுமி
மணல் கிளறி
குழிப்பறித்து
தன் பகல்களைப் புதைத்து
வாசல் படியில் காத்திருக்கிறாள்
வருவோர் போவோர் அசைவுகளை
சலிப்போடு
நோட்டில் கிறுக்குகிறாள்
அப்பாவும் அம்மாவும்
ஆபிசிலிருந்து வீடு திரும்பிய போது..
அவளுடன் சேர்ந்து
ஒரு பூனைக்குட்டி
ஒரு மரம்
ஒரு சைக்கிள்
ஒரு பூ
மற்றுமொரு கப்பல்
காத்திருந்தது..
****
நன்றி : ' கீற்று ' இணைய இதழ் - ( மார்ச் - 30 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5032:2010-03-30-06-05-10&catid=2:poems&Itemid=265

3 கருத்துகள்: