*
சுரங்கப்பாதைகளின்
அகலச் சுவர்களில்..
சாய்ந்து நின்று
யாசிக்கிறது..
எப்போதும்
ஒரு வறுமை..
படியேறும் உச்சியில்..
காமத்தின் வாசம் கமழ
பேரமாகின்றன..
மலர்கள்..
இருள் பூசிய சாலைகளை
விளக்கொளி மெழுகி..
விரையும் வாகனங்கள் கடக்கும் நொடியில்..
மின்னி மறைகிறது..
சில புன்னகையும்..
சரிகை வட்டங்களும்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக