ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

சந்தர்ப்பவாதங்களை அடுக்கிக் கொண்டிருக்கும் ஒற்றைப் பகல்..

*

சந்தர்ப்பவாதங்களை
அடுக்கிக் கொண்டிருந்த
ஒற்றைப் பகலொன்றின் நிழலில்
காத்திருக்க நேர்ந்தது

மௌனத்தை உதறியபடி
நெருங்கி வந்த
தருணங்களை உனதென்று
வாதிடுகிறாய்..

முடிவுகளற்ற சாட்சியங்களின்
கோப்புகளை
மொத்தமாய் சமர்ப்பிக்கிறாய்..

சரிப்பார்ப்பதற்கான
இரவுகளை உமிழும்
மேஜை விளக்குகள்
மின்னிழைக் கம்பிகளின் ஒளிர்தலில்..
கண்ணெரிந்து அவிகின்றன

ஒரு நேர்க்கோட்டின்
இருமுனைப் புள்ளிகளும்
விலகியிருத்தலே
கோடுகளின் சாத்தியத்தை
உருவாக்கக் கூடும்..

நீ உனதெனவும்
நான் எனதெனவும்

பகிர முடியாக் காரணங்களை
தத்தம் அறைகளினின்றி
துரத்தியடிப்பதில்

ஒரு குறுகியக் கால
வெற்றி
இருவருக்குமே வழங்குப்படும்..

அதுவரை -

சந்தர்ப்பவாதங்களை
அடுக்கிக் கொண்டிருக்கும்
ஒற்றைப் பகலோன்றின்
நிழலில்
காத்திருக்க நேர்வதொன்றும்
தப்பில்லை

****

நன்றி : ( உயிரோசை / உயிர்ம்மை .காம் ) பிப்பிரவரி - 2010

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2531

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக