ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

விளிம்பு நோக்கி நகரும் மையமும்..உலோகச் சுருள் இழையும்..

*
உருகும் சொற்களின் வார்ப்பென
உலோகச் சுருள் இழைகள்
கூர் ஓரங்களைக் கொண்டு
கவனப் பிசகாகி..

எழுதும்
விரல் ரேகையைக் கிழிக்கக்கூடும்..

கவிதைப் பட்டறையில்
கனன்று கொதிக்கும்
உருக்கு நெருப்பின் துருத்தியொன்று
சுவாசமென
விம்மிப் புடைக்கிறது
ஒவ்வொரு முறை
மையத்தை விளிம்பு நோக்கி நகர்த்தும்போது..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் - ( பிப்பிரவரி - 26 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4259:2010-02-26-04-25-38&catid=2:poems&Itemid=88

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக