திங்கள், மே 31, 2010

அசைவற்று நிற்கும் அந்தி நிழல்..

*
மரணத்தின் ஓலத்தை
தன்னுள் புதைத்துக் கொண்டு அவற்றை
சிறு சிறு உருண்டைகளென
வருவோர் போவோரிடமெல்லாம்
விநியோகம் செய்கிறது

அகாலப் பொழுது மெழுகி கரையும்
அந்தி நிழலில் அசைவற்று நிற்கிறது

கடப்பவர் நோக்கி
யாசிக்கும் கைகள் நடுங்குகின்றன

மரணத்தின் சிறு உருண்டைகள்
திடீரென்று சிறகு முளைத்து
நகரமெங்கும் தாழப் பறக்கின்றன

அவை
இறுதி மூச்சிழுக்கும்
தொண்டைக் குழிக்குள் நுழைந்து

ஒப்பாரி பாடிகளின்
குரல்வளையிலிருந்து புறப்படுகின்றன
மயானத்தின் சாம்பல் நிற பாதைகளை
காத்திரமாய் நுகர்ந்தபடி..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக