திங்கள், மே 31, 2010

நிரந்தரமாய் தங்கிவிட்ட இருள்..

*
எப்படியும் சொல்லிவிட வேண்டும்
என்னும் தீர்மானம்
பலமுறை வந்து போவது உண்டு
ஆனாலும் நீ பறித்துவிடும் பூக்களில்
ரத்தம் துளிர்க்கிறது எப்போதும்

ஆறுதல் என்று எதை சொல்ல சொல்லுகிறாய் !
என்னோடு நிரந்தரமாய் தங்கி விட்ட இருளையா?

உடன்படுதல் உனக்கு சம்மதமில்லை
ஏற்றுக்கொள்ளுதல் எனக்கு ஒத்துப்போவதில்லை

நம்
இருமுனைகளின் கூர்மையிலும்
ரத்தமும் சதையுமாய் ஒரு துரோகம் வளர்கிறது

அதன் மாம்ச வேட்டைக்குரிய
மிருகங்களென மீசைத் துடிக்கக்
காத்திருக்கிறோம் நீயும் நானும்..!

எப்படியும் சொல்லிவிடவேண்டும்
என்னும் தீர்மானம்
மனதுக்குள் வந்து போவதுண்டு

ஆனாலும்
நீ பறித்துவிடும் பூக்களில்
ரத்தம் துளிர்க்கிறது எப்போதும்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மே - 31 - 2010 ]

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2978

2 கருத்துகள்:

  1. ஆறுதல் என்று எதை சொல்ல சொல்லுகிறாய் !
    என்னோடு நிரந்தரமாய் தங்கி விட்ட இருளையா?


    ஆனாலும்
    நீ பறித்துவிடும் பூக்களில்
    ரத்தம் துளிர்க்கிறது எப்போதும்..


    மனம் கொள்ளைபோகும் வரிகள் கவிதைக்காரன்.....!!!!

    பதிலளிநீக்கு