திங்கள், மே 31, 2010

காத்திருப்பின் மிச்சங்கள்..!

*
கால்களின் தாளம் நின்று விட்டது

இசையோடு வந்த ஒருவன்
போகும்போது
இசையைக் கொண்டு சென்றான்

காத்திருப்பின் மிச்சங்களென
கடித்துத் துப்பிய நகங்கள்
டேபிள் மீது
மின்விசிறிக் காற்றில்
ஆடிக் கொண்டிருக்கிறது..

தரப்பட்ட
குளிர்ந்த நீரில்
கண்ணாடி டம்ளர்
அழுது ஓய்கிறது..

இனி
நீ
வரமாட்டாய்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக