திங்கள், மே 31, 2010

கனவுகளின் உதிரிப் பாகங்கள்..!

*
திரும்பிய திசையெல்லாம்
கனவுகளின்
உதிரிப் பாகங்கள்

குனிந்து சேகரிக்கும்
குழந்தை மனம்
கண்டு கொள்கிறது
வர்ணங்களற்ற காட்சிகளை

உறைந்து பின் உடனே நெகிழும்
புன்னகைகளை

இசையொன்றின் துணுக்கும்
வாய்ப் பிளந்து கிடந்தது

சாம்பல் நிற நாணல்கள்
முனை உடைந்து கூர்மையாய்
மணலில் செருகிக் கிடந்தன

திரும்பிய திசையெல்லாம்
கனவுகளின்
உதிரிப் பாகங்கள்
சுமந்து கிடந்தன
சொல்லிவிட முடியாத
துயரத்தின் வர்ணத்தை..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக