திங்கள், மே 31, 2010

கை நிறைய சொற்கள்..

*
தவளையின்
கீழ்த் தாடை உப்பலில்
வரிகளிட்டு வழிகிறது
ஒரு
கவிதைக்கான
பிசுபிசுத்த படிமம்

விரல் சுட்டித் தொட யத்தனித்த
கணத்தில்..
அது தன் நாவை நீட்டித் துப்பியது
ஒரு உவமையை

கை நிறைய சொற்களைக் கொண்டு
உன் உதட்டில் பூசிவிட
வாய்ப்புகள் துளிர்க்காத
பசலை வனத்தில்
சலசலத்து நகரும் நதிக் குமிழுக்குள்
அடைத்து அனுப்புகிறேன்..
அள்ளிப் பருகிக் கொள்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மே - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2954

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக