*
ஒற்றையடிப் பாதையின்
இருமருங்கிலும்
குரல்கள் பூத்திருக்கின்றன
பல
தன் உற்சாகங்களை சிறகுப் பொருத்தி
ரசிக்கின்றன
தன் துயரங்களை சலனமற்ற குளத்தின்
விளிம்பாகுகின்றன
சில
தன் அவலங்களைப்
பட்டுப் போன மரத்தின் பொந்தில்
இருள் பூசி மௌனிக்கின்றன
தன் தயக்கங்களை
அதன் முனகல்களை
கவனிப்பற்ற நாணலில் வழிந்திறங்கும்
பனித்துளியென
மென்மையாக ஊதுகின்றன
ஒற்றையடிப் பாதையின்
இருமருங்கிலும் பூத்திருக்கும்
குரல்களில்
சில..
தன் வெட்கத்தை மொத்தமாய்
உன்னிடம்
தந்துவிட்டதாய்
புகார் சொல்கின்றன
அட..!
உன் உதடுகளின்
இரு மருங்கிலும்
கொத்துக் கொத்தாய்
வெட்கமே பூத்திருக்கின்றன..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக