திங்கள், மே 31, 2010

நிராயுதபாணி..!

*
என்
ஒவ்வொரு ஆயுதங்களையும்
நீ பரிசாக யாசித்துப்
பெற்றுக் கொண்டாய்

பின்னொரு காலை
ஒரு போர்க்களத்தை
அறிவிப்பு செய்தாய்

துரோகக் கடிவாளம் பூட்டிய
மனக் குதிரையில்
விரைந்து வருகிறாய்

நின்று கொண்டிருக்கிறேன்
உன்னை எதிர்பார்த்துத்
தனியனாய்..

கையில்
ஒற்றைக் கேடயத்துடன்..!

****

2 கருத்துகள்:

  1. துரோகக் கடிவாளம் பூட்டிய மனக்குதிரை ....!!!!!

    ஆச்சரியமூட்டும் கற்பனையின் நிஜம் ....!!!!

    பதிலளிநீக்கு