*
என்
ஒவ்வொரு ஆயுதங்களையும்
நீ பரிசாக யாசித்துப்
பெற்றுக் கொண்டாய்
பின்னொரு காலை
ஒரு போர்க்களத்தை
அறிவிப்பு செய்தாய்
துரோகக் கடிவாளம் பூட்டிய
மனக் குதிரையில்
விரைந்து வருகிறாய்
நின்று கொண்டிருக்கிறேன்
உன்னை எதிர்பார்த்துத்
தனியனாய்..
கையில்
ஒற்றைக் கேடயத்துடன்..!
****
துரோகக் கடிவாளம் பூட்டிய மனக்குதிரை ....!!!!!
பதிலளிநீக்குஆச்சரியமூட்டும் கற்பனையின் நிஜம் ....!!!!
நன்றி..!
பதிலளிநீக்குகலாசுரன்