*
மறுப்பேதும் சொல்வதற்கில்லை
வாதத்தின் இறுதி நுனியில்
குரல் கம்ம
சொற்கள் தேய்ந்தன..
முதுகைத் துளைத்து நின்ற
கருத்தின் கூர்மை
இதயத்தின் பின்கதவு வரை
தொட்டு நின்றது
எய்தவனின்
தோள் வலிமையை
ஒப்புக் கொள்ள நேர்ந்த நொடி..
அபாயங்களை புறக்கணித்து
எதிர்வாதக் கவசங்களை
நழுவி விழச் செய்து..
உள்ளங்கை விரித்து
திரும்பியத் தருணம்..
அவன் பார்வையின்
மழுங்கலை
அருவருப்புப் புழு நெளிதலோடு
ஒப்பிடத் தோன்றியது
சந்தர்ப்பக் களங்கள்
வெட்டவெளியாய்
இருக்கும்பட்சத்தில்..
தாக்குதல்கள்
அடர் மௌனங்களிலிருந்து தான்
கிளம்புகின்றன
மறுப்பேதும் சொல்வதற்கில்லை..
வாதத்தின் இறுதி நுனியில்
குரல் கம்ம..
சொற்கள் தேய்கின்றன..
இருந்தாலும்
மார்பு இருக்க..
முதுகை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்
வீழ்த்தொழிக்க..?!
****
மார்பு இருக்க..
பதிலளிநீக்குமுதுகை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்
வீழ்த்தொழிக்க..?!
pressingly said it and its nature.....!!!
நன்றி..!
பதிலளிநீக்குகலாசுரன்